Tuesday, September 28, 2010

இளமையின் பயணம்

இளமையின் பயணம்
பயணம் மனிதனை விசித்திரமான ஓர் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அப்போது ஐந்து வயதிருக்கும் மஞ்சப்பையில் சிலேட்டுக் குச்சிகளோடு கையில் முட்டாய்ப் பொட்டலத்துடன் அப்பாவின் விரல் பிடித்து எண்ணெய் படிந்த மூஞ்சியுடன் மாணவன் என்கிற அடையாளத்தோடு முதல் வகுப்பில் நுழைந்த தருணங்கள் வாழ்க்கையோட்டத்தில் மின்மினிப் பூச்சியைப் போல ஒளி எழுப்பிவிட்டு மறைந்து விடுகிறது.

தலைக்கு மேல் கை உயர்த்தி காதினைத் தொடாதவர்களையும் மாணவர்களாகச் சேர்த்துக்கொள்ள இன்றையத் தனியார் பள்ளிகள் அனுமதிக்கின்றன. இவ்வாறு வழியறியாமல் தொடங்கிய மாணவ வாழ்க்கைப் பயணம் எல்லையற்று நீண்டு கொண்டே செல்கிறது. சிரிக்கிறபோது சிரித்து அழுகிறபோது அழுது விளையாடுகிறபோது விளையாடி ரசித்த நினைவுகள் விழிகளின் ஓரத்தில் நீர்த்திவலைகளாகத் திரண்டு நிற்கின்றன. அது எப்போது வேண்டுமானாலும் கண்ணீராக உருமாறி உதிர்ந்து விடக்கூடும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கல்லூரிப் பருவம் மறக்க முடியாததாக இருந்திருக்கின்றது. அடர்ந்த காட்டுக்குள் இயங்கும் மூங்கில் இசையைப்போல நிசப்தமாக அலைந்து கொண்டிருக்கும் காலமது. சிலர் விதைக்கப்பட்டுத் தொலைந்து போயிருக்கிறார்கள். எத்தனையோ பேர் விதைக்கப்படாமலும் முளைவிட்டிருக்கிறார்கள். இது பதின் பருவத்து நியதியாகக் கூட இருக்கலாம்.

எதற்காக இந்தக் கௌரவப் பயணம் என்ற கேள்வி ஆழ்மனதில் உதித்திருக்குமா? இதற்கான விடைகளை அறிந்து கொள்வதற்கு முன்பே மூன்றாண்டுகள் முடிவடைந்து விடுகின்றன. இந்த விரைவுப் பயணத்தின் நினைவுகளை மட்டும் இதுவரை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு மாணவனின் இலட்சியங்களையும் கனவுகளையும் கல்லூரியில் உள்ள மரங்கள் மௌனமாகக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த மரங்கள் தன் வாழ்நாளில் எத்தனை மாணவர்களைச் சந்தித்திருக்கக் கூடும். மரங்களுக்கு மட்டும் பேசும் வாய்ப்பு இருந்தால் மாணவச் சமுதாயம் திக்கு முக்காடிப் போயிருக்கும். மாணவர்கள் தங்களுடைய நட்பையும் காதலையும் ஆசிரியர் மீதான கோபத்தையும் வாழ்வின் மீதான எதிர்ப்பையும் மரங்களின் கீழிருந்துதான் விவாதித்திருக்க முடியும்.


இந்தக் கல்விமுறை அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் வெறியையும் வழிமுறைகளையும் மட்டும்தான் கற்றுத் தருகின்றன. சகமனிதர்களை நேசிக்கவும் கற்றுத் தர வேண்டும். தோல்வியில் துவண்டு விழாமல் எந்தத்துறையிலும் என்னால் வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கையுணர்வோடு வாழ்வதற்கு உதவுவதே கல்வி என்பதை உள்ளூரப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாணவனிடமும் தன்னையறியாமல் ஏதோ ஒரு விதமான திறமை ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்பதே தேடலை நோக்கிய ஒற்றை வழிப்பயணம்தான். அந்தத் திறமையைத் தேடிக் கண்டடைய முயற்சிக்க வேண்டும்.

இன்றைய ஊடகங்கள் இளைஞர்களைத் தன்வயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களாகிய நுகர்வோர்களுக்கான வியாபாரிகள் மாணவர்களே என்பதை இளையசமுதாயம் என்றைக்கு உணர்ந்து கொள்ளப் போகிறது. குறிப்பாக மாணவர்கள் ஊடகங்களின் தாக்கத்தால் வாசிப்புப் பழக்கத்தையும் இழந்திருக்கின்றனர். முடிந்தால் புத்தகம் படிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் என்பார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், நாம் புத்தகம் வாசிப்பதையே குறைத்துக் கொண்டு வருகிறோம். கல்லூரியில் படிக்கிறபோது நூலகத்தைச் சரியாகப் பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மார்க்சியம் என்கிற கருத்தியலை உலகிற்கு அறிமுகம் செய்த தோழர் கார்ல் மார்க்சின் பென்சில் கோடு இல்லாத நூல்களே நூலகத்தில் இல்லை என்று அவரின் வாசிப்புப் பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுவர். அத்தகைய ஒருவரால்தான் உலகமே வியந்து பாராட்டக்கூடிய மூலதனம்(டாஸ்கேபிடல்) என்ற பொருளாதார கோட்பாட்டு நூலை எழுதமுடிந்திருக்கிறது. புத்தகம் படிக்கிற பழக்கமும் அனுபவமும் மனித மனத்தைப் பக்குவப்படுத்தும் என்பது அனுபவசாலிகளின் கருத்தாகும்.

பொருளாதாரச் சிக்கலோடு கல்லூரிக்குள் நுழைகிற மாணவர்கள் உலகத்திலேயே நாம்தான் துன்பத்தின் உச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறார்கள். இது தவறான எண்ணம். தோல்வி மட்டுமே மனிதனைச் செம்மைப்படுத்துகிறது. ஒரு வெற்றிக்குப் பின்னால் யாராவது ஒரு ஆணோ, பெண்ணோ மறைந்திருப்பார்கள். ஆனால், ஒரு தோல்விக்குப் பின்னால் ஆயிரம் அனுபவங்கள் மனித நினைவுகளில் ஊசலாடிக் கொண்டிருக்கும். எல்லா தனிமனிதர்களும், வாழ்வின் மீதான கோபத்தையும் துயரங்களையும் சுமந்து கொண்டுதான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ இளைஞர்கள் கல்லூரிக்குள் நுழைகிற வாய்ப்புக் கிடைக்காமல் கல்வியை இழந்து கூலித் தொழிலாளர்களாகத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வாய்ப்புக் கிடைத்தும் தவற விடுகிற அவலம் தினந்தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மாணவப்பருவத்தில் நல்ல நண்பர்களுக்கும் உரிய இடமுண்டு. உங்களுடைய வளர்ச்சிக்கு எவன் தூண்டு கோலாக இருந்து அதில் கிடைக்கும் வெற்றியில் மகிழ்ச்சியடைகிறானோ அவனே உண்மையான நண்பன். எதிர்பார்த்துப் பழகுவது நட்பல்ல. இன்றைய மாணவர்கள் காதல், அன்பு, நட்பு, பாசம் என்கிற வார்த்தை ஜாலங்களுக்குள் இருக்கிற உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பித் தவிக்கிறார்கள்.

வீட்டில் சரியான அன்பு கிடைக்காத போதுதான் மாணவ, மாணவிகள் வெளியில் அன்புக்காக ஏங்குவார்கள். ஒரு ஆணோ, பெண்ணோ உதவி செய்ய முன் வந்தால் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் பழக்கம் காலங்காலமாக நம்மிடையே இருந்து வருகிறது. தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுடன் உண்மையாகப் பழகுகிறபோது, அவர்களுடைய அன்பு உங்களுக்கு மிகப் பெரியதாகத் தோன்றும். அவர்களை விட்டுப் பிரிய நேரிடுகிறபோது மற்றவருடைய எதார்த்தத்திற்கு மீறிய அன்பு காதலாகத்தான் தெரியும். கல்லூரியில் படிக்கிறபோது ஆண், பெண் மீது வரக்கூடிய ஈர்ப்பு (இனக்கவர்ச்சி) இயல்பானதுதான்.

மனம் பக்குவமடையாத காலமது. அதைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஆண், பெண் சேர்ந்து பொது இடத்திலோ தனியிடத்திலோ இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாலே தவறாகப் புரிந்து கொள்ளும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. அவர்கள் சகோதர, சகோதரிகளாகவோ நல்ல நண்பர்களாகவோ இருக்கலாம். ஆனால் நம் மனம் புனைவுகளைத் தேடிச் செல்கிறது. இருபாலரையும் உண்மையாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் தவறில்லை. படிக்கிற காலகட்டத்தில் நிறைய நூல்களைப் படித்து உலகறிவையும் நல்ல அனுபவங்களையும் சேமிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவனும் தனது கடமையை உணர்ந்தும் குடும்பச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டும் படிக்கிறபோது தன்னைச் சுற்றி நடக்கும் தேவையில்லாத விசயங்களில் மனம் கவனத்தைச் செலுத்தாது. பந்தயக் குதிரையைப் போல இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க முடியும் என்ற புரிதல் வேண்டும். தனக்கான திசையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் இவர்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது.


ஆரோக்கியமான சமுதாயம் உருவாவதற்கு சமூகத்தின் மீதான பேரன்பும் மனித நேசித்தலைச் சுவாசமாகக் கொண்ட மாணவர்களும் தேவை. இன்றைய சூழ்நிலையில் படித்தவர்கள்தான் எல்லாத் தவறுகளையும் செய்கிறார்கள், சாதி, மதம் பார்க்கிறார்கள் சக மனிதர்களை நேசிக்க மறுக்கிறார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது. படித்தவன் சூதுவாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான் என்பான் பாரதி. தற்போது படித்துக் கொண்டிருக்கிற நீங்கள்தான் பின்பு படித்தவர்களாகப் போகிறீர்கள் என்பதை உணர்ந்து அக்குற்றச்சாட்டை மாற்ற முயற்சியுங்கள். ஒப்பில்லாத மாணவச் சமுதாயம் உலகத்திற்கு ஒரு புதுமையாக இருக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

“இளவேனிற் காலத்தில்
நூறு நூறு மலர்கள்
இலையுதிர் காலத்தில்
அறுவடை நிலா
கோடை காலத்தில்
நறுமணத் தென்றல்
குளிர் காலத்தில்
வெண்பனி தொடரும்
உன் மனதில் உதவாக்கரை விசயங்கள்
கொட்டிக் கிடக்கவில்லையென்றால்
எல்லாப் பருவங்களும்
நல்ல பருவங்களே, உனக்கு!

- ஜென் கவிதை.

Saturday, September 11, 2010

மிகச்சிறந்த மலையாளத் திரைப்படங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்ட மலையாளத் திரைப்படங்கள்

மலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள்.

இப்போது
மோசர் பேயர் மற்றும் ஷைனா வீடியோஸ் [சென்னை] போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை எல்லாமே குறுவட்டில் கொண்டு வந்திருப்பதனால் படங்களை வாங்குவதும் பார்ப்பதும் எளிது. ஆகவே என் சொந்த ரசனையின்படி ஒரு பட்டியலை அளிக்கிறேன். தரமான பொழுதுப்போக்குத்தன்மை, சமூக விமரிசனத்தன்மை உணர்ச்சிகரத்தன்மை ஆகியவற்றை நான் அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன்.
இவற்றை திரும்பிப் பார்க்கும்போது மலையாளப்படங்களில் முக்கியமான திரைக்கதை எழுத்தாளர்களின் பங்களிப்பு பிரமிக்கச் செய்வதாக இருப்பதைக் காண்கிறேன். முக்கியமாக எம்.டி.வாசுதேவன் நாயர். மலையால திரையுலகின் முதல் நாயகன் அவரே. அரை நூற்றாண்டுக்காலமாக அவர் மலையாளத்தில் மிக வலுவான கதைகளை உருவாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார். அவை காலம்கடந்தும் ரசனையில் வாழ்கின்றன. மலையாள திரை ரசனையையே அவர் வடிவமைத்தார் என்று சொல்லலாம்.

மலையாள சினிமா என்பது கேரள இடதுசாரி இயக்கத்தின் உருவாக்கம் என்று தயங்காமல் சொல்லலாம். கம்யூனிஸ்டுகள் சினிமாவை கையில் எடுத்துக் கொண்டதனாலேயே திரை ரசனை வளர்ந்தது. இயக்குநர்கள் பி.பாஸ்கரன், எழுத்தாளர் தகழி, பஷீ£ர், தோப்பில் பாஸி, ஷெரீ·ப், உறூப், டி தாமோதரன்,இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன், தேவராஜன்,பாபுராஜ், பாடலாசிரியர்கள் வயலார் ராமவர்மா போன்ற ஆரம்பகால திரைப் படைப்பாளிகள் அனைவருமே இடதுசாரிகள்தான். எம்.டி.வாசுதேவன் நாயரும் இடதுசாரி இயக்கத்திலிருந்து வந்தவரே.

இடதுசாரி இயக்கம் ஐம்பதுகளில் கிராமங்களிலேயே ரசனையையும் வாசிப்பையும் உருவாக்கியது. கிராமப்புற நூலகங்கள் பல்லாயிரக்கணக்கில் தொடங்கபப்ட்டன. அங்கே கலைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவை பயில்முறை நாடகங்களை உருவாக்கின. அந்நாடகங்களில் பெரிய படைப்பாளிகள் பங்கு கொண்டார்கள். டி.தாமோதரன்,ஷெரீ·ப், உறூப்,பி.பாஸ்கரன், வயலார், தேவராஜன் எல்லாமே அங்கிருந்து சினிமாவுக்கு வந்தவர்களே. இவ்வாரு கேரள மக்களின் ரசனையில் ஏற்பட்ட ஒரு பெரும் மாற்ரமே எழுபதுகளில் சினிமாவில் வளர்ச்சிகொண்டது.

மலையாள சினிமாவின் தொடக்கம் முதல் உறூப், தகழி, பஷீர் போன்ற எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால்தொண்ணூறுகளுக்குப் பின் திரையில் சாதனை படைத்த எழுத்தாளர்கள் எவரும் இல்லை. இலக்கியம் அறிந்த திரை எழுத்தாளர் என்ற இடம் ஸ்ரீனிவாசன், லோகித் தாஸ¤க்குப் பின்னர் காலியாகவே இருக்கிறது.
***

ராமுகாரியட்
செம்மீன் [தகழி]
முடியனாய புத்ரன்

பி.பாஸ்கரன்
ராரிச்சன் எந்ந பௌரன்
மூலதனம் [டி.தாமோதரன்]
கள்ளிசெல்லம்மா [ஜி.விவேகானந்தன்]
நீலக்குயில் [ உறூப்]
உம்மாச்சு [உறூப்]
இருட்டின்றே ஆத்மாவு [எம்.டி.வாசுதேவன்நாயர்]

கெ.எஸ்.சேதுமாதவன்
அடிமகள் [தகழி]
சட்டக்காரி [பம்மன்]
துலாபாரம் [கெ.பி.கொட்டாரக்கரா]
ஓடயில்நிந்நு [பி.கேசவதேவ்]
அனுபவங்ஙள் பாளிச்சகள் [தகழி]
நட்சத்ரங்ஙளே காவல் [பி.பத்மராஜன்]
ஒருபெண்ணின்றே கத[என்.மோகனன்]
கரகாணாக்கடல் [முட்டத்து வர்க்கி]
தேவி[பி சுரேந்திரன்]
நீலத்தாமர [எம்.டி.வாசுதேவன்நாயர்]
வாரிக்குழி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அசுரவித்து [எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஓப்போள் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
முறப்பெண்ணு [[எம்.டி.வாசுதேவன்நாயர்]]

என்.என் பிஷாரடி
நிணமணிஞ்ஞ கால்பாடுகள் [பாறப்புறத்து]

.வின்செண்ட்
அஸ்வமேதம் [தோப்பில் பாசி]

திரிவேணி
பார்கவிநிலையம் [பஷீர்]
யட்சி [மலையாற்றூர் ராமகிருஷ்ணன்]

ஹரிஹரன்
அமிர்தம்கமய[எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஒரு வடக்கன் வீரகதா[எம்.டி.வாசுதேவன்நாயர்]
பஞ்சாக்னி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
நகக்ஷதங்ஙள் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
எந்நு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி எம்.டி.வாசுதேவன்நாயர்]
பரிணயம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]

பி.என் மேனோன்
குட்டியேடத்தி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஓளவும் தீரமும் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
காயத்ரி [சி.ராதாகிருஷணன்]

எம்.டி.வாசுதேவன் நாயர்
நிர்மால்யம்
மஞ்š
கடவு

பவித்ரன்
உத்தரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
உப்பு

தோப்பில்பாஸி
சரசய்யா
நிங்கள் என்னெ கம்யூனிஸ்டாக்கி

.வி.சசி
உத்சவம் [ஷெரீ·ப்]
இனியும் புழ ஒழுகும்
ஆறாட்டு
திருஷ்ண
ஈநாடு[டி.தாமோதரன்]
ஆரூடம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
ஆவநாழி[டி.தாமோதரன்]
மிருகய[லோகித்தாஸ்]
கரும்பின் பூவின் அக்கரே [பி.பத்மராஜன்]
இதா இவிடவரே [பி.பத்மராஜன்]
அவளுடே ராவுகள் [ஷெரீ·ப்]
ஆள்கூட்டத்தில்தனியே [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அபிநந்தனம் [ஷெரீ·ப்]
ஈற்றா[ஷெரீ·ப்]
இடவழியிலே பூச்ச மிண்டாபூச்ச [எம்.டி.வாசுதேவன்நாயர்]
சதனம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
சுகுருதம்[எம்.டி.வாசுதேவன்நாயர்]
தேவாசுரம்[ரஞ்சித்]

பரதன்
பிரயாணம் [பி.பத்மராஜன்]
லோறி[[பி.பத்மராஜன்]
சாட்ட[பி.ஆர் நாதன்]
ஓர்மைக்காய் [ஜான் போல்]
தகர [பி.பத்மராஜன்]
ரதிநிர்வேதம் [பி.பத்மராஜன்]
காதோடுகாதோரம்[ ஜான் போல்]
சாமரம்[ஜான்போல்]
ஒரு மின்னாமினுங்ஙின்றே நுறுங்ஙு வெட்டம் [ ஜான் போல்]
வெங்கலம்[லோகித்தாஸ்]
வைசாலி [எம்.டி.வாசுதேவன்நாயர்]
தாழ்வாரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]
அமரம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

பி.பத்மராஜன்
தேசாடனபட்சி கரயாறில்ல
தூவானத்தும்பிகள்
கள்ளன் பவித்ரன்
ஒரிடத்தொரு பயில்வான்

அபரன்
அரப்பட்ட கெட்டிய கிராமத்தில்
நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்
நொம்பரத்திப்பூவு
பெருவழியம்பலம்
மூநாம்பக்கம்

மோகன்
சாலினி என்றெ கூட்டுகாரி [பி.பத்மராஜன்]
இடவேள [பி.பத்மராஜன்]
முகம்
தீர்த்தம்
விடபறயும் மும்பே

ஜோஷி
தினராத்ரங்ஙள் [ஜான் போல்]
நிறக்கூட்டு [ஜான் போல்]
சியாம [ஜான் போல்]கௌரவர் [லோகித் தாஸ்]

கெ.ஜி.ஜார்ஜ்
உள்கடல்
யவனிக
ஆதாமிண்டே வாரியெல்லு
இரகள்
மேள
ஈகண்ணிகூடி
மற்றொராள்

அடூர் கோபாலகிருஷ்ணன்
சுயம்வரம்
எலிப்பத்தாயம்
கொடியேற்றம்
முகாமுகம்
மதிலுகள்

நெடுமுடிவேணு
பூரம்

பாசில்
மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்
என்றே மாமாட்டிக்குட்டியம்மைக்கு
மணிச்சித்ரத்தாழ்

அரவிந்தன்
ஒரிடத்து
சிதம்பரம்
தம்பு

சிபி மலையில்
தனியாவர்த்தனம் [லோகித தாஸ்]
கிரீடம் [லோகித தாஸ்]
செங்கோல்[லோகித தாஸ்]
கமலதளம்[லோகித தாஸ்]
பரதம்[லோகித தாஸ்]
சதயம் [எம்.டி.வாசுதேவன்நாயர்]

சத்யன் அந்திக்காடு
டி.பி.பாலகோபாலன் எம்.ஏ [ஸ்ரீனிவாசன்]
ஸ்ரீதரன்றே ஒநாம் திருமுறிவு [ஸ்ரீனிவாசன்]
பொன்முட்டயிடுந்ந தாறாவு [ஸ்ரீனிவாசன்]
சந்தேசம் [ஸ்ரீனிவாசன்]
மழவில்காவடி[ஸ்ரீனிவாசன்]
வரவேல்பு[ஸ்ரீனிவாசன்]
சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்[ஸ்ரீனிவாசன்]
மிதுனம்[ஸ்ரீனிவாசன்]

ஷாஜி என் கருண்
பிறவி

லெனின் ராஜேந்திரன்
மீனமாசத்திலே சூரியன்
வேனல்
சுவாதிதிருநாள்

யு.கெ.குமாரன்
இனியும் மரிச்சிட்டில்லாத்த நம்மள்
அதிதி

பி..பக்கர்
சாப்ப
மணிமுழக்கம்

அஜயன்
பெருந்தச்சன்[எம்.டி.வாசுதேவன்நாயர்]

பாலுமகேந்திரா
ஓளங்ஙள்
யாத்ரா

பாலசந்திரமேனோன்
மணியன்பிள்ள அதவா மணியன் பிள்ள
அச்சுவேட்டன்றே வீடு

லோகித் தாஸ்
பூதக்கண்ணாடி
சூத்ரதாரன்

டி.வி,சந்திரன்
டானி

கமல்
கைக்குடந்ந நிலாவு
பெருவண்ணாபுரத்தே விஸேஷங்கள்
மிழிநீர்பூவுகள்
கிருஷ்ணகுடியில் ஒருபிரணைய காலத்து
தூவல் கொட்டாரம்[லோகித் தாஸ்]

ஸ்ரீனிவாசன்
வடக்குநோக்கி யந்த்ரம்
சிந்தாவிஷ்டயாய சியாமளா

கெ.சுகுமாரன்
பாதமுத்ர

சியாமபிரசாத்
அக்னிசாட்சி

ஜெயராஜ்
வித்யாரம்பம் [ஸ்ரீனிவசன்]
குடும்பசமேதம்
தேசாடனம் [மாடம்பு குஞ்சுகுட்டன்]
களியாட்டம்[மாடம்பு குஞ்சுகுட்டன்]